Published : 20 Dec 2023 06:20 AM
Last Updated : 20 Dec 2023 06:20 AM
சென்னை உள்ளிட்ட நான்கு வட மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய அதிர்வுகள் இன்னும் முழுமையாக விலகாத நிலையில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் வரலாறு காணாத பெருமழை கொட்டித் தீர்த்திருக்கிறது. ஓர் ஆண்டின் சராசரி மழைப்பொழிவுக்குரிய அளவு, ஒரே நாளில் பதிவாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தின் காயல்பட்டினத்தில் பதிவான 94.6 செ.மீ. மழைப்பொழிவு, அத்தகைய ஓர் அரிய நிகழ்வுதான். முற்றிலும் எதிர்பாராத இந்த நிலை, மக்களை மட்டுமல்ல, அரசாங்கத்தையும் திகைக்கச் செய்திருக்கிறது. தென் மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக மண்டல வானிலை ஆய்வு மையம், டிசம்பர் 14இல் முன்னறிவிப்பு வெளியிட்டது; அந்த முன்னறிவிப்பு, அதி தீவிர கனமழையாக (21 செ.மீ.க்கு மேல்) 24 மணி நேரத்துக்கு முன்னதாக மாறியது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...