Published : 04 Dec 2023 05:54 AM
Last Updated : 04 Dec 2023 05:54 AM
அமெரிக்காவிலிருந்து செயல்பட்டுவரும் காலிஸ்தான் பிரிவினைவாதி குருபத்வந்த் சிங் பன்னுனைக் கொலை செய்யும் சதித் திட்டத்தில், இந்திய அரசு அதிகாரி ஒருவருக்குத் தொடர்பிருப்பதாக அமெரிக்க நீதித் துறை வெளியிட்டுள்ள அறிக்கை பெரும் விவாதங்களை எழுப்பியிருக்கிறது. இது தொடர்பாக விசாரணை நடத்த உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்படும் என்று இந்திய வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.
போதைப் பொருள், ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டுவந்த நிகில் குப்தாவுக்கும் இந்திய உளவுத் துறை மூத்த அதிகாரி ஒருவருக்கும் இடையில் நிகழ்ந்த தொலைத்தொடர்பு உரையாடல்களின் அடிப்படையில், அமெரிக்க நீதித் துறை இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறது. பெயர் குறிப்பிடப்படாத அந்த அதிகாரி, நிகில் குப்தாவிடம் பன்னுனைக் கொல்வதற்கு ஆளை நியமிக்கக் கேட்டுக்கொண்டதாகவும் இது தொடர்பாக இரண்டு அமெரிக்கர்களுடன் அவர் பேசியிருப்பதாகவும் அமெரிக்க நீதித் துறையின் அறிக்கை கூறுகிறது. அதேவேளையில், ஜூன் 20 முதல் 24 வரை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கப் பயணம் மேற்கொண்டதால் பன்னுனைக் கொல்வதற்கான திட்டம் நிறுத்திவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. செக் குடியரசு நாட்டில் இருந்த நிகில் குப்தாவை ஜூன் 30 அன்று அமெரிக்கா கைது செய்துள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment