Published : 27 Nov 2023 06:20 AM
Last Updated : 27 Nov 2023 06:20 AM
தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர்கள் அரசு அலுவலகங்களில் ஆய்வுசெய்து, மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கான ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்னும் திட்டம் டிசம்பர் மாதம் தொடங்கப்பட உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அரசு இயந்திரத்துக்கும் மக்களுக்குமான இடைவெளியைக் குறைக்கும் இதுபோன்ற திட்டங்கள் வரவேற்புக்குரியவை. என்றாலும், ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் கள ஆய்வுத் திட்டங்களால் விளைந்திருக்கும் பயன்களை இந்தத் தருணத்தில் சீர்தூக்கிப் பார்ப்பதும் அவசியமாகிறது. இந்தப் புதிய திட்டத்தின்கீழ், ‘மாவட்ட ஆட்சியர்கள் இனி ஒவ்வொரு மாதமும் ஒருநாள் வட்டம் அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வுசெய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்றடைவதை உறுதிசெய்வர்’ என்று தமிழ்நாடு அரசின் செய்திக் குறிப்பு கூறுகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment