Published : 27 Oct 2023 06:20 AM
Last Updated : 27 Oct 2023 06:20 AM
ஆயுத பூஜை பண்டிகை தொடர் விடுமுறைக் காலத்தில் கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அரசு அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைக்காகப் பேருந்துகள் இயங்காது என்று தென் மாநில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பு அறிவித்தது கண்டிக்கத்தக்கது. ஆம்னி பேருந்துகள் விவகாரத்தில் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகிறது.
வாரயிறுதி, தொடர் விடுமுறை, பண்டிகைக் காலம் உள்ளிட்ட நாள்களில் ஆம்னி பேருந்துகளின் கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்படுவது தொடர்கதையாகிவிட்டது. கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என்று பல தரப்புகளிலிருந்து கோரிக்கைகள் எழுந்தாலும், அதற்கு அரசு செவி சாய்ப்பதில்லை. என்றாலும் குறைந்தபட்சம் பண்டிகைக் காலங்களிலாவது அரசுப் போக்குவரத்து அதிகாரிகள் ஆம்னி பேருந்துகளில் ஆய்வுசெய்து, அதிகக் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கின்றனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment