Published : 05 Oct 2023 06:25 AM
Last Updated : 05 Oct 2023 06:25 AM
மடமை இருளைப் பொசுக்கும் ஜோதியாக, 19ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் தோன்றியவர் திருவருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் வடலூர் சி.இராமலிங்கனார். மூடநம்பிக்கை களையும் சாதிய ஒடுக்குமுறைகளையும் தகர்த்து, ஆன்மநேய ஒருமைப்பாட்டை மக்களிடம் கொண்டுசென்ற மாபெரும் சீர்திருத்தவாதி அவர்.
‘சமய உலகில் நுழைந்து சமய நெறியிலே நடந்து சமய உலகைக் கடந்தவர் வள்ளலார்,’ என வள்ளலாரை அறிமுகப்படுத்துகிறார் ஆய்வாளர் ப.சரவணன். சாதிகளையும் சமயங்களையும் மட்டுமல்ல, உருவ வழிபாட்டையும் வள்ளலார் கடந்து நின்றார். துறவுக்குரிய துவராடை தவிர்த்து வெள்ளாடை தரித்தார். அரை நூற்றாண்டு (1823-1874) காலமே வாழ்ந்த அவர், அதில் பெரும்பகுதியைச் சென்னையில் (1825 முதல் 1858 வரை) கழித்தார். இலக்கணமறிந்த தமிழ் வித்துவான், சொற்பொழிவாளர், நூலாசிரியர், பதிப்பாசிரியர் என ‘தருமமிகு சென்னை’யில் வள்ளலார் பல பரிமாணங்களில் வெளிப்பட்டார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment