Published : 11 Sep 2023 08:01 AM
Last Updated : 11 Sep 2023 08:01 AM
பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் காலியாக உள்ள துணைவேந்தர் பதவியை நிரப்புவதற்கான தேடுதல் குழுவுக்கான நியமன அறிவிப்பை ஆளுநர் மாளிகை வெளியிட்டிருப்பது புதிய சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் 22 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இந்தப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் உள்ளிட்ட விஷயங்களைப் பின்பற்ற, பல்கலைக்கழகச் சட்ட விதிகள் உள்ளன. பல்கலைக்கழகங்களைக் கட்டுப்படுத்தும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சார்பிலும் துணைவேந்தர்களை நியமிக்கப் பொதுவான வரையறைகள் உள்ளன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தேடுதல் குழுவில் பொதுவாக மூன்று பேர் நியமிக்கப்படுவது வழக்கம். ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் ஒருவர், அரசு, வேந்தர் சார்பில் தலா ஒருவர் என 3 பேர் நியமிக்கப்படுவார்கள். புதிய துணைவேந்தர் நியமனத்துக்கான தேடுதல் குழு அமைக்கப்பட்டதும், அந்த அறிவிப்பு ஆளுநர் ஒப்புதலுடன் அரசிதழில் வெளியிடப்படும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment