Published : 18 Aug 2023 06:20 AM
Last Updated : 18 Aug 2023 06:20 AM
நாடாளுமன்றத்தில் மூன்று குற்றவியல் மசோதாக்களை அறிமுகப்படுத்தியுள்ளது மத்திய அரசு. இந்திய தண்டனைச் சட்டம் (IPC), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (Cr.P.C), இந்திய சாட்சியங்கள் சட்டம் (Indian Evidence Act) ஆகியவற்றுக்கு மாற்றாக, இந்தப் புதிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட சட்டங்கள் என்பதால், இதில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்கிற நோக்கத்தில், இந்தப் புதிய சட்ட மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் நோக்கம் வரவேற்கத்தக்கதே. ஆனால், ஏற்கெனவே இருக்கும் இந்தச் சட்டங்களின் ஆங்கிலப் பெயர்களுக்குப் பதிலாக முறையே பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷியா எனப் பெயர் மாற்றப்பட்டு, மசோதாக்களாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இது இந்தியாவின் பன்மொழிப் பண்பாட்டைக் கேள்விக்கு உள்ளாக்குவதாக உள்ளது. இது இந்தி அல்லாத மொழிகளைப் பேசும் மக்களிடையே வேறுபாட்டை உருவாக்கும் என விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment