Published : 08 Aug 2023 06:20 AM
Last Updated : 08 Aug 2023 06:20 AM
திருச்சி துறையூரைச் சேர்ந்த பிரியா என்பவர், போலி மருத்துவரிடம் கருக்கலைப்பு செய்துகொண்டதால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. பிரியாவுக்கு ஏற்கெனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கருவில் இருக்கும் மூன்றாவது குழந்தையும் பெண்தான் என்று தெரிந்துகொண்டு, இத்தகைய ஆபத்தான கருக்கலைப்பை நாடி, தன் உயிரையே இழந்துவிட்டார். பெண் சிசுக்கொலை வெவ்வேறு வகைகளில் இன்னும் தொடர்வதையே இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.
தமிழகத்தில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் 1980-90களில் பெண் குழந்தைகளைக் கருவிலேயே அழிப்பதும், மீறிப் பிறந்துவிட்டால் சிசுக்கொலை செய்வதும் அதிக அளவில் இருந்தது. அதைத் தடுக்கும் நோக்கில், ‘தொட்டில் குழந்தைத் திட்ட’த்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 1992இல் அறிமுகப்படுத்தினார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...