Published : 16 Jun 2023 06:21 AM
Last Updated : 16 Jun 2023 06:21 AM

ப்ரீமியம்
உயிர் காக்கும் பணியில் உயிரிழப்பு கூடாது

தமிழ்நாட்டில் 48 மணி நேரத்தில் நான்கு மருத்துவர்கள் இதயம், நுரையீரல் செயலிழப்புக்கு உள்ளாகி பணியிடத்திலேயே உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. தீய பழக்கங்கள் இல்லாதவர்களாகவும் உடல்நலத்தைப் பேணியவர்களாகவும் அறியப்பட்ட இவர்கள் அகால மரணமடைந்திருப்பது, தமிழ்நாட்டில் மருத்துவர்களின் பணிச்சூழல் குறித்த கவனத்தை ஈர்த்துள்ளது.

உயிரிழந்தவர்களில் மூவர் அரசு மருத்துவமனைகளிலும் ஒருவர் தனியார் மருத்துவமனையிலும் பணியாற்றி வந்துள்ளனர். பணிச்சுமை சார்ந்த மன அழுத்தம்தான் இவர்களின் மரணத்துக்குக் காரணம் என்று அரசு மருத்துவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால் மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். அரசு மருத்துவர்களுக்குப் பணிச்சுமைப் பிரச்சினையே இல்லை என்று அவர் கூறியிருக்கிறார். மேலும், அரசு மருத்துவமனைகளில் நிலவும் 1,021 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x