Published : 12 Mar 2023 09:24 AM
Last Updated : 12 Mar 2023 09:24 AM
உலக கிளாசிக் நாவல்களில் ஒன்று ‘சித்தார்த்தன்’ (Siddhartha). நோபல் விருது பெற்ற ஜெர்மன் எழுத்தாளர் ஹெர்மன் ஹெஸ்ஸே இதன் ஆசிரியர். இந்தியாவில் இந்த நாவல் புகழ்பெறக் காரணம், அது அடிப்படையாகக் கொண்ட இந்தியத் தத்துவம்தான். தன்னை அறிவதற்கான தேடல்தான் இந்த நாவலின் பயணம். இந்த நாவலின் காலம் புத்தர் வாழ்ந்த காலகட்டம்.
நாவலின் நாயகனான சித்தார்த்தனின் பயணத்தையும் இந்த நாவலுக்கான ஹெஸ்ஸேயின் பயணத்தையும் ஒப்பிடலாம். ஆன்மிகத் தேடலில் நாவலின் சித்தார்த்தனை, புத்தனிடத்தில் வைத்துப் பார்க்கலாம் என்பதுபோல் ஹெஸ்ஸேவையும் சித்தார்த்தன் இடத்தில் வைத்துப் பார்க்கலாம். ஐரோப்பியச் சூழலில் உறுதியான கிறித்துவ மத நம்பிக்கை கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் ஹெஸ்ஸே. ஆனால், அதிலிருந்து விடுபட்டுப் புதிய தேடலை நோக்கிச் செல்லவும் அவருக்கு அந்தப் பின்னணியே காரணமாகவும் இருந்தது. அவரது தாய்வழித் தாத்தா, ஹெர்மன் குந்தர்த் திருநெல்வேலியில் இறைப் பணி மேற்கொண்டவர். தமிழ் தெரிந்தவர். திருமணத்திற்குப் பிறகு இன்றைய கேரள மாநிலம் தலசேரியில் தங்கி மலையாளம் கற்று, பைபிளை மலையாளத்தில் மொழிபெயர்த்துள்ளார். மலையாளம் - ஆங்கில அகராதி உள்ளிட்ட பல நூல்களை இயற்றியுள்ளார். ஹெஸ்ஸேயின் தாய் இந்தக் காலகட்டத்தில்தான் பிறந்தார். ஆனால், மூன்று வயதுக்குப் பிறகு ஜெர்மனிக்குக் கொண்டுசெல்லப்பட்டு 15ஆம் வயதில் மீண்டும் இந்தியா வந்து தன் பெற்றோருடன் இணைந்தார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment