Published : 17 Feb 2023 09:21 AM
Last Updated : 17 Feb 2023 09:21 AM
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கூறியிருக்கும் கருத்து, உலகமெங்கும் உள்ள தமிழ்ச் சமூகத்தின் பேசுபொருளாகியிருக்கிறது. இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர், குறிப்பாக இன்றைய இலங்கைச் சூழலில், மீண்டும் பிரபாகரனின் இருப்பு குறித்த பேச்சால் பல கேள்விகள் எழுந்திருக்கின்றன. பழ.நெடுமாறனின் அறிவிப்பால் ஈழத் தமிழ் மக்களுக்கு மீட்சி கிடைக்குமா என்பதை முக்கியமாக ஆராய வேண்டியிருக்கிறது.
இலங்கை அரசின் எதிர்வினை: 2009 மே 18ஆம் தேதியன்று, ஈழ இறுதிப் போர் முடிவில் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது. அதற்கு முந்தைய நாளில் பிரபாகரனின் சடலம் என முகத்தை மட்டும் காண்பித்தனர். அது சடலம் போலின்றி ஒளிப்படத்தை வைத்துச் செய்த பொம்மையைப் போல இருந்தது. ஆனால், இறுதியில் போரில் உயிர் துறந்த பிரபாகரனின் சடலம் கைப்பற்றப்பட்டதாகக் காட்டப்பட்டது நம்பக்கூடியதாக இருந்தது. பிரபாகரனின் மரணம் தொடர்பில் இலங்கை அரசு குழப்பமான நிலைகளைக் காண்பித்தமையால், ஈழத்தில் மாத்திரமின்றி உலகத் தமிழர்களிடமும் அது குறித்து ஒரு சந்தேகம் எழவே செய்தது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...