Published : 02 Feb 2023 06:49 AM
Last Updated : 02 Feb 2023 06:49 AM
சேலம் மாவட்டம் திருமலைகிரியில் உள்ள பெரிய அம்மன் கோயிலில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளைஞர் பிரவீன், சாமி கும்பிடப் போனதற்காக திமுக நிர்வாகி ஒருவர் தகாத சொற்களால் அவரைத் திட்டி, கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். இதையடுத்து, இரும்பாலை காவல் துறை, பாதிக்கப்பட்ட பிரவீனை அழைத்து சமாதானப் பேச்சுவார்த்தை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது.
எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு அதிகாரி தனக்கு விதிக்கப்பட்ட பொறுப்புகளை வேண்டுமென்றே தட்டிக் கழிப்பது குற்றம். அதற்கு ஓர் ஆண்டு சிறைத்தண்டனை என்றும், ஆற்ற வேண்டிய கடமையை மறுக்கும் அதிகாரிக்கும் ஆறு மாதச் சிறைத்தண்டனை விதிக்கலாம் என்றும் இச்சட்டத்தின் பிரிவு 4 கூறுகிறது. வன்கொடுமை வழக்குகளில் சமரசம் செய்வதற்குப் போலீஸ் அதிகாரிகள் முயல்வது குற்றம் என இந்தப் பிரிவுக்கு ஒரு விளக்கம் சேர்ப்பதற்கு அரசாங்கத்துக்குப் பரிந்துரைக்க வேண்டிய தேவை இருக்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment