Published : 13 Jan 2023 06:51 AM
Last Updated : 13 Jan 2023 06:51 AM
மெளரிய மன்னன் அசோகர் காலத்தில் புத்த மதம் தமிழ்நாட்டில் பரவியதாகச் சொல்லப்படுகிறது. பெஷாவர் நகரத்துக்கு அருகில் கண்டறியப்பட்ட பாறைச் சாசனம் தமிழ்நாட்டில் புத்த மதம் பரவ அசோகர் மேற்கொண்ட முயற்சிக்கான சான்று. தமிழ்நாட்டில் குறிப்பாக சோழர் பகுதியில் இதற்கான சான்றுகள் பல உண்டு. இந்தச் சான்றுகளைக் கள ஆய்வின் மூலம் இந்நூலில் பா.ஜம்புலிங்கம் கவனத்துடன் பதிவுசெய்துள்ளார்.
முதலாம் ராஜராஜன் அனுமதியுடன் நாகப்பட்டினத்தில் ஒரு பெளத்த விகாரம் கட்டப்பட்டடதற்குச் சான்றாக ஆனைமங்கலச் செப்பேட்டைச் நூலாசிரியர் முன்வைக்கிறார். சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்களிலும் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களிலும் உள்ள புத்த மதப் பதிவுகளையும் நூலாசிரியர் தொகுத்தளித்துள்ளார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment