Published : 18 Dec 2022 10:30 AM
Last Updated : 18 Dec 2022 10:30 AM
சிராப்பள்ளி முசிறிச் சாலையில் 10 கி.மீ. தொலைவிலுள்ள திருவாசி மாற்றுரை வரதீசுவரர் கோயில் சம்பந்தராலும் சுந்தரராலும் பாடப்பெற்ற பெருமையுடையது. 26 சோழர் கல்வெட்டுகளுடன் வரலாற்று விடிவிளக்காய் இக்கோயில் திகழ்கிறது. இங்குள்ள கல்வெட்டுகளில் அந்நாளைய மனிதர்கள் பலரைச் சந்திக்க நேர்ந்தாலும் கார்த்திகைச் செல்வி கற்பகவல்லிதான் உள்ளமெங்கும் அள்ளித் தெளித்த கவிதையென நிறைந்து நிற்கிறார்.
யார் இந்தக் கற்பகவல்லி?: வரலாற்றுக்குப் பல முதல்களை வழங்கிய சோழப் பேரரசர் முதல் இராஜராஜரின் அரண்மனைப் பணியிலிருந்த பெரியவேளத்துப் பெண்தான் நக்கன் கற்பகவல்லி. அதென்ன வேளம் என்கிறீர்களா? பணியாளர் தொகுதியைக் குறிக்கப் பயன்பாட்டிலிருந்த அக்காலச் சொல்தான் வேளம். மன்னர், அரசியர் பெயரேற்றும் பெரிய, சிறிய என அளவு கருதியும் இயங்கும் பணிசார்ந்தும் பெயர் பெற்றிருந்த வேளங்கள் அந்நாளில் இதுபோல் பல இருந்தன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment