Published : 14 Dec 2022 06:47 AM
Last Updated : 14 Dec 2022 06:47 AM

ப்ரீமியம்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: குற்றவியல் நடவடிக்கை எப்போது?

ராஜா

எதிர்க்கட்சிகள் அறச்சீற்றத்துடன் முன்வைக்கும் விமர்சனங்கள், அவை ஆளுங்கட்சியாக மாறிய பின்னர் நீர்த்துவிடும் எனப் பொதுவான ஒரு விமர்சனம் உண்டு. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்குக் காரணமானவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிடப்பட்டிருக்கும் நிலையில், மேற்சொன்ன விமர்சனம் திமுக அரசு மீது திரும்பியிருக்கிறது. அந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது ஏன் குற்றவியல் நடவடிக்கை இல்லை என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருக்கின்றன.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் நடத்திவந்த போராட்டம், அதன் நூறாவது நாளில் (2018 மே 22) உச்சகட்டத்தை அடைந்தது. போராட்டக்காரர்கள் கலவரத்தில் ஈடுபட்டதாகக் கூறி, காவலர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் எனும் முறையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்வைத்த விமர்சனங்கள் மிக முக்கியமானவை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x