Published : 07 Dec 2022 06:49 AM
Last Updated : 07 Dec 2022 06:49 AM
கடந்த இரண்டு மாதங்களில் அமேசான், மெட்டா, இன்டெல், டிவிட்டர் உள்ளிட்ட பல அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்கள் பெரும் எண்ணிக்கையில் பணிநீக்கங்களை அறிவித்துள்ளன. உலகளாவிய வேலைவாய்ப்பு - பயிற்சி நிறுவனத்தின் கூற்றுப்படி செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பணிநீக்கங்களின் எண்ணிக்கை 60,000ஐத் தாண்டிவிட்டது. இத்தகைய அபரிமிதப் பணிநீக்கங்கள் இந்தியாவின் ஏற்றுமதி வாய்ப்புகளில், குறிப்பாகத் தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.
பணிநீக்கங்கள் ஏன் அதிகரித்துள்ளன? உலகளவில் பொருளாதார மந்தநிலைக்கான சாத்தியம் என்பது வருங்கால நெருக்கடிகளை உணர்த்தும் ஓர் அபாய அறிகுறியாகும். உலகின் பெரும்பாலான பகுதிகளில் பணவீக்கம் அதிகரித்துவருகிறது. மத்திய வங்கிகள் இந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து வட்டி விகிதங்களை உயர்த்திவருகின்றன. இதன் காரணமாக, கடன் வாங்குவதற்கும் நுகர்வுக்குமான செலவு அதிகரிக்கும். இது பொருளாதார வளர்ச்சியையும் வேலைகளையும் பாதிப்பதிலேயே சென்று முடியும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment