Published : 03 Nov 2022 06:47 AM
Last Updated : 03 Nov 2022 06:47 AM

ப்ரீமியம்
திருமுறைகண்ட சோழ ஓவியம்

திருமுறைகண்ட சோழ ஓவியத்தின் தோற்றம் | படங்கள்: ந.தியாகராஜன் |

பு.சு.ஸ்ரீராமன்

சிவபாதசேகரன் என்ற பட்டப் பெயருக்கு எல்லா வகையிலும் தகுதியுள்ள சோழப் பேரரசர் முதலாம் ராஜராஜன். சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய முதல் மூன்று சைவக் குரவர்களின் திருப்பதிகங்களை மீட்டு, நம்பியாண்டார் நம்பியின் மூலம் அவற்றை திருமுறைகளாகத் தொகுத்ததால் திருமுறைகண்ட சோழன் என்றும் அவர் அறியப்படுகிறார். 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியார் இயற்றியதாகக் கருதப்படும் ‘திருமுறைகண்ட புராணம்’ மேற்கண்ட நிகழ்வை விவரிக்கிறது. ஆயினும், நூலின் ஆசிரியர் திருமுறை மீட்ட சோழ மன்னரைத் தொடக்கத்தில் ‘ராசராச மன்னன் அபயகுலசேகரன்’ என்றும், இடையே ‘ராசராச மன்னன்’ என்றும், ‘குலசேகரன்’, ‘மன்னன்’ என்றும் பல பெயர்களால் குறிப்பிடுகிறார். நம்பியாண்டார் நம்பியின் காலத்தையும் அறுதியிட்டுக் கூற முடியவில்லை. எனினும், திருப்பதிகங்களை மீட்டது முதலாம் ராஜராஜனே (985-1014), தொகுத்தது நம்பியாண்டார் நம்பியே என்ற கருத்து ஒரு சில அறிஞர்களைத் தவிர, அனைவராலும் பரவலாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x