Published : 15 Oct 2022 06:30 AM
Last Updated : 15 Oct 2022 06:30 AM
“விவசாயிகளாக இருந்த என் பாட்டி-பாட்டன், ஓய்வில்லாமல் உழைத்த என் தாய்-தந்தை ஆகியோர் எப்போதுமே என்னுள் உயிர்ப்புடன் இருக்கிறார்கள். அதுபோல் பொருளாதாரம் பற்றிய பாதுகாப்பின்மையும் என்னுள் எப்போதுமே உண்டு. என்னைப் போன்ற உழைக்கும் வர்க்கத்திலிருந்து வந்தவர்களுக்கு, இது வாழ்நாள் முழுவதும் கூடவே வரும் அச்சம். நான் என் ஆசிரியர் பணியைத் தொடர்வதற்கு இது மட்டுமே காரணம்” என்கிறார், இலக்கியத்துக்கான இந்த ஆண்டின் நோபல் பரிசைப் பெற்ற ஆனி எர்னோ (Annie Ernaux).
இந்தப் பயம், தான் பிறந்து வளர்ந்த சமூகப் பின்புலத்தின் காரணமாகத் தனக்கு ஏற்பட்ட, இன்னமும் ஏற்படுகிற தயக்கங்கள், நம்பிக்கையின்மை ஆகியவற்றையெல்லாம் தன் எழுத்தும் சுமந்து நிற்கிறதென்று எர்னோ கருதுகிறார். இதனால் அவரது எழுத்து வாசகர்களை இதமாக அரவணைத்துச் செல்லாது; உண்மைகளை அப்பட்டமாகப் பேசிச் சங்கடப்படுத்துவதைப் பற்றி எந்தக் கவலையும் கொள்ளாதவராக உள்ளார் 82 வயதான எர்னோ. அலங்காரங்கள் அற்று, கூர்மையான கத்தியின் துல்லியத்துடன் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய மொழிக்குச் சொந்தக்காரர் எர்னோ.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment