Published : 04 Oct 2022 06:50 AM
Last Updated : 04 Oct 2022 06:50 AM

ப்ரீமியம்
துணிந்து நின்ற சுதந்திர வீரன்!

‘கொடிகாத்த குமரன்’, ‘திருப்பூர் குமரன்’ என்ற பெயர்களால் அழைக்கப்படும் குமாரசாமி, சென்னிமலையில் 1904இல் பிறந்தார். குடும்ப வறுமை காரணமாக 12 வயதிலிருந்து சுமார் ஐந்து ஆண்டுகள் பள்ளிப்பாளைத்தில் நெசவு வேலைக்குச் சென்றார். 1922இல் திருப்பூரில் தரகுமண்டியில் வேலை பார்த்துவந்த குமரனுக்கு அரசியல் ஆர்வம் ஏற்பட்டது. அப்போது திருப்பூரில் இயங்கிவந்த ‘தேசபந்து வாலிபர் சங்க’த்தில் உறுப்பினராகப் பதிவுசெய்துகொண்டு, பொதுத்தொண்டு ஆற்றிவந்தார் குமரன். கள்ளுக்கடைகளின் முன்பு போராடுவதையும் குறிக்கோளாகக் கொண்டிருந்தார்.

கள் குடிப்பவர்களிடம் அதன் தீமையை விளக்கிக் கூறுவார் குமரன். அதனால் கடைக்காரர்கள் கள் மொந்தையை இவரது தலையில் வீசி அவமானப்படுத்துவார்கள். அந்நியப் பொருளான ‘வெடியை வாங்காதீர், காசைக் கரியாக்காதீர்’ என பட்டாசுக் கடைகளின் முன்னால் நின்று முழங்குவார். கடைக்காரர்கள் வெடியைக் கொளுத்தி வீசினாலும், தீப்புண்களை வாங்கிக்கொண்டு விடாமல் போராட்டத்தைத் தொடர்வார் குமரன்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x