Published : 14 May 2022 10:05 AM
Last Updated : 14 May 2022 10:05 AM
தி.ஜானகிராமனின் நூற்றாண்டில் (2021) தி.ஜா.வுடன் தொடர்புடைய மேலும் இரு நூல்கள் காலச்சுவடு பதிப்பகம் மூலம் வெளிவந்திருக்கின்றன. தி.ஜா. அவ்வப்போது எழுதிய கட்டுரைகள் எழுத்து, முன்னுரை-மதிப்புரை, கலை, பயணம், சமூகம், தன் அனுபவம் போன்ற உட்தலைப்புகளில் ‘தி.ஜானகிராமன் கட்டுரைகள்’ என்ற பெயரில் சுகுமாரனால் தொகுக்கப்பட்டுள்ளது. மற்றொன்று, தி.ஜா.வின் படைப்புகள் குறித்து சுகுமாரனால் அவ்வப்போது எழுதப்பட்ட கட்டுரைகள், முன்னுரைகள், பதிப்புரைகள் போன்றவை ‘மோகப் பெருமயக்கு’ என்ற நூலாகியுள்ளது. தி.ஜா.வின் மறைவையொட்டி எழுதப்பட்ட அஞ்சலிக் குறிப்பு முதல் தி.ஜா.வின் கட்டுரைத் தொகுப்புக்கு எழுதப்பட்ட பதிப்புரை வரை, கடந்த நாற்பதாண்டு காலத்தில் எழுதப்பட்ட பதினோரு கட்டுரைகளும் நேர்காணல் ஒன்றும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இவ்விரு நூல்களுமே சுகுமாரன் என்ற தீவிர வாசகரால் தி.ஜா. எனும் படைப்பாளுமைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட காணிக்கைகள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT