Published : 06 Apr 2022 07:07 AM
Last Updated : 06 Apr 2022 07:07 AM
நான் காப்பாளராகப் பணியாற்றும் அரசு ஆதிதிராவிட நலத் துறை மாணவர் விடுதியில் 1 படிக்கும் மாணவன் சில நாட்களுக்கு முன்பு விடுதியிலும் இல்லை, பள்ளிக்கும் போகவில்லை. மறுநாள் அவனிடம் “நேற்று எங்கே போனாய்?” என்று கேட்டேன். “என் தங்கச்சிய டயாலிசிஸ் செய்ய விழுப்புரத்துக்குக் கூட்டிக்கிட்டுப் போனேன்” என்றான். “வீட்டுல வேற யாருமில்லியா?” என்று கேட்டேன்.
“அப்பா இல்ல, அம்மா மட்டும்தான்” என்றான். “அவங்க போகக் கூடாதா?” என்று கேட்டதற்கு “அம்மா கூலி வேலைக்குப் போறாங்க. ஒரு நாளு வேலைக்குப் போகலன்னாலும் தங்கச்சிய டயாலிசிஸுக்குக் கூட்டிக்கிட்டுப் போவ முடியாது” என்றான். “வாரத்துக்கு எத்தன முற போகணும்?” என்று கேட்டதற்கு “மூணு முற சார்” என்றான். “எத்தனாவது படிக்குது?” என்று கேட்டேன். “ஒன்பதாவது” என்றான். அதற்குப் பிறகு டயாலிசிஸ் நோயாளிகள் பற்றி, அவர்களுடைய குடும்பச் சூழல் பற்றி விசாரித்தேன். மனதை உருக்கும் தகவல்கள் கிடைத்தன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...