Published : 07 Mar 2025 06:30 AM
Last Updated : 07 Mar 2025 06:30 AM
வாதி, பெரியாரியக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர். ‘புதிய குரல்’ அமைப்பின் நிறுவனர். பெண்ணுரிமைகளுக்காகவும் சாதியற்ற சமூகம் அமைவதற்காகவும் பல்வேறு பணிகளைச் செய்துவருகிறார். ஏராளமான சாதி மறுப்பு - சுயமரியாதைத் திருமணங்களை நடத்தி வைத்திருக்கிறார். சமூகத்தில் நிலவும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் பகுத்தறிவுச் சிந்தனையைத் தூண்டும் விதத்திலும் பல புத்தகங்களை எழுதியிருக்கிறார். சர்வதேச உழைக்கும் மகளிர் நாளை (மார்ச் 8) முன்னிட்டு அவருடன் நடத்திய நேர்காணலில் இருந்து:
ஆணுக்கென்று ஒரு நாள் இல்லாதபோது பெண்களுக்காக ஒரு நாள் தேவையா? - இது இந்தத் தலைமுறையின் கேள்வி. பெரும்பாலான வீடுகளில் ஆணும் பெண்ணும் சமமாகத்தானே நடத்தப்படுகிறார்கள் என்று தோன்றலாம். ஆனால், சமூகத்தில் அனைத்துப் படிநிலைகளிலும் இது நடக்கிறதா? அப்படியே நடந்தாலும் இந்தச் சமத்துவம் எதுவரை? கல்லூரிப் படிப்பு, திருமணம், பிள்ளைப்பேறு, சொத்து பிரிப்பது போன்றவற்றின்போது ஆணுக்கும் பெண்ணுக்கும் சமத்துவம் இருக்கிறதா? வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் சமத்துவம் இல்லாத நிலையில், இன்னொரு புறம் சிறு குழந்தைகள்கூடப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்களே.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment