Published : 29 Jan 2025 11:23 AM
Last Updated : 29 Jan 2025 11:23 AM

தமிழகத்​தில் மாற்று அரசியல் சாத்​தி​யமா?

தமிழகத்​தில் மாற்று அரசி​யலுக்கான ஒரு நல்ல வாய்ப்பு. ஈரோடு கிழக்கு தொகுதி - மிகப் பொருத்​தமான களம். முற்றி​லும் மாநகர பகுதி அல்லது முழு கிராம பகுதியை உள்ளடக்கிய தொகுதி மாற்று அரசி​யலுக்கு சரியான களமாக இருக்க இயலாது. நகர, கிராம பகுதிகள் இணைந்த ஈரோடு கிழக்கு, புதிய முயற்சி​களுக்கு கச்சித​மாய் பொருந்​தும்.

அதிலும், இடைத்​தேர்தல் என்பது மாற்று அரசியல் முன்னெடுப்​புக்கு கூடுதல் ஆதாயம். இந்த நிலை​மையை மேலும் சாதக​மாக்க, வலிமை சேர்க்க, நேரடி இரு முனைப் போட்டி அடித்​தளமாக உள்ளது. இந்த வகையில் ஈரோடு கிழக்கு வாக்​காளர்கள் முக்​கி​யத்துவம் பெறுகின்​றனர். அதற்கு முன், ‘மாற்று அரசி​யல்’ சாத்​தி​யமா?

இந்திய அரசமைப்புச் சட்டத்​தின் அடிப்​படை கட்டு​மானத்தை யாராலும் எப்போதும் மாற்ற இயலாது. கேசவானந்த பாரதி வழக்கு தொடங்கி பல வழக்​கு​களில் பல நேரங்​களில் உச்ச நீதி​மன்றம் இதனை மிகத் தெளிவாகக் கூறி​யுள்​ளது. சாசனத்​தின்படி நாடாளு​மன்ற ஜனநாயகம் வரையறைக்கு உட்பட்டு​தான் மாற்று அரசியல் எதுவும் செயல்பட முடி​யும். நாட்​டின் ஒட்டுமொத்த அமைதி, வளர்ச்சி, அரசியல் ஸ்திரத்​தன்​மைக்கு இந்த ஏற்பாடு மிகவும் அவசி​யம்.

அப்படி​யானால், நாடாளு​மன்ற ஜனநாயக நடைமுறை​யில் மாற்று அரசி​யலுக்கு இடமில்​லையா? மிக நிச்​சயமாக இருக்​கிறது. என்ன ஒன்று... அதற்கு பெரும்​பான்மை மக்களின் ஆதரவு வேண்​டும். ஆனால், ஆட்சி அதிகாரம் எப்போதும் மாற்று அரசி​யலுக்கு எதிராகவே உள்ளது. அதனால்​தான் அதிகார அத்து​மீறல்களை எதிர்த்து மக்கள் ஆதரவைப் பெற மாற்று அரசி​யல்​வா​திகள் மிகக் கடுமையாக போராட வேண்டி உள்ளது.

புதிய முயற்சி​கள், நல்ல மாற்​றங்​கள், மாற்று சிந்​தனை​களுக்கு நம் நாட்​டில் அத்தனை எளிதில் அங்கீ​காரம், ஆதரவு கிடைத்து விடு​வ​தில்லை. பெரிய அரசியல் கட்சிகளின் பிடி​யில் தேர்தல் களம் சிக்​கிக் கொண்​டுள்​ளது. இது, நமது ஜனநாயகத்​தின் ஆகப் பெரும் சோகம்.

கடந்த 1977-ல் ஜெயபிர​காஷ் நாராயண் தலைமை​யில் ஜனதா கட்சி வெற்றி பெற்று மொரார்ஜி தேசாய் பிரதம​ரானார். எனினும், அதை முற்றி​லும் மாற்று அரசியல் என்று சொல்​லிவிட இயலாது. ஒரு தூய காந்​தி​ய​வா​தியாக பிரதமர் மொரார்ஜி தேசாய், அதிகாரக் குவியல், அதிகார முறை​கேடு, ஊழல் மற்றும் அரசியல் ஆதாயங்​களுக்கு அப்பால் தனது பதவியை நிலை நிறுத்தினார்.

ஜவர்கலால் நேரு​வின் பொருளா​தாரக் கொள்கை, இந்திரா காந்​தி​யின் சோசலிச நடவடிக்கை, அறிவியல் தொழில்​நுட்ப வளர்ச்​சி​யில் ராஜீவ் காட்டிய ஆர்வம், நரசிம்​ம​ராவ் வகுத்த புதிய பொருளா​தாரக் கொள்கை, வாஜ்பாய் ஏற்படுத்திய உட்கட்​டமைப்பு வசதிகள் எல்லாமே ஒரு வகையில், அரசு நிர்​வாகத்​தில் மாற்று அரசி​யலின் வெவ்​வேறு பரிமாணங்​கள்​தான்.

தமிழ்​நாட்​டை பொறுத்த வரை, காமராசரின் கல்வி வளர்ச்சி தொழில் வளர்ச்சி திட்​டங்​கள், சாமானியர்​களுக்கு சங்கடம் தராத எம்ஜிஆர் அரசின் செயல்​பாடு​கள், மகளிருக்கு முக்​கி​யத்துவம் தந்து ஜெயலலிதா அறிமுகப்​படுத்திய பல்வேறு நலத் திட்​டங்கள் எல்லாம் மாற்று அரசியல் என்று கூறமுடி​யா​விட்​டாலும், புதிய முயற்சி​கள், நவீன செயல் திட்​டங்கள் எனலாம். அப்படி​யானால் மாற்று அரசியல் எது? அதிகார மைய அரசியலை அடித்​தட்டு மக்களின் அரசி​யலாக மாற்றுவதே மாற்று அரசி​யல்.

ஆட்சி​யாளர்கள் பின்​னால் மக்கள் செல்வதை மாற்றி மக்களின் பின்​னால் ஆட்சி​யாளர்களை வரவழைப்​பதும் மாற்று அரசி​யல்​தான். எப்போதெல்​லாம் அதிகாரக் குவியல் ஜனநாயகத்​தின் குரல் வளையை நசுக்க முற்​படு​கிறதோ அப்போதெல்​லாம் மக்களின் குரலை பாது​காத்து அதிகார வர்க்​கத்தைசரியான திசைக்கு திருப்பு​வதும் மாற்று அரசி​யல்​தான்.

தற்போது, ஈரோடு கிழக்கு தொகுதி, வாக்​காளர் கையில் இருக்​கிறது - தமிழ்​நாட்​டில் மாற்று அரசி​யலின் எதிர்​காலம். எந்த ஓர் இடைத்​தேர்​தலிலும் பிரதான எதிர்க்​கட்சி பங்கேற்றே தீர வேண்​டும். ஆனால், அதிமுக​வின் தேர்தல் புறக்​கணிப்பு - மக்களின் ஜனநாயக உணர்​வுகளை மதிக்காத அலட்​சியப் போக்கையே காட்டு​கிறது.

இன்றுள்ள நிலை​​யில் தமிழகத்​தில் விஜய், சீமான், அண்ணா​மலை, திரு​மாவளவன், அன்புமணி ராமதாஸ் ஆகிய 5 தலைவர்​களும் வெவ்​வேறு கொள்​கைகளை கொண்​ட​வர்​கள். இன்று தமிழக இளைஞர்கள் இவர்கள் பின்​னால் அணிவகுத்து இருக்​கின்​றனர். என்ன காரணம்..?

வெற்று முழக்​கங்​கள், சிறு​பிள்​ளைத்​தனமான அறிவிப்பு​கள், தனிநபர் துதி, அதிகாரக் குவியல் இவற்றுக்கு இளைஞர்கள் மத்தி​யில் ஆதரவு நாளுக்கு நாள் மங்கிக் கொண்டே வருகிறது. இது, தமிழ்​நாட்​டில் ஆரோக்​கியமான அரசியல் மீண்​டும் துளிர்க்​கும் என்ப​தற்கான மிக நல்ல அறிகுறி. ஈரோடு கிழக்கு தொகு​தி​யில் நாம் தமிழர் கட்சி​யின் ஒருங்​கிணைப்​பாளர் சீமான் முன்​வைக்​கும் வாதங்​கள், சிலருக்கு ஏற்க முடி​யாத​தாய் இருக்​கலாம்.

ஆனால் இவர்கள் முன்​வைக்​கும் எதிர்​வாதம், ஆற்றும் எதிர்​வினை ஆரோக்​கிய​மானதாக இல்லை. தேர்தல் முடி​வில் ஈரோடு கிழக்கு தொகு​தி​யில் வெல்லப் போவது யாராக​வும் இருக்​கட்டும்; இப்​போதைக்கு, நாம் தமிழர் சீ​மான் ​முன்​வைக்​கும் ​மாற்று அரசி​யல், மக்​களின் கவனத்தை கணிசமாக ஈர்த்​துள்ள​தாகவே தெரி​கிறது.

சீ​மானின் பார்​வை​யில் இன்றைய சூழலை இப்படி சொல்​லலாம்​: ​மாற்​று அரசி​யல்​ - ஏ​மாற்​று அரசி​யல்​ ஆகிய இரண்​டில்​, மக்​கள்​ ​யார்​ பக்​கம்​ நிற்​கப்​ போகிறார்​கள்​?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT   ( 19 Comments )
  • S
    SAHADEVAN NATESAN

    நாட்டை காப்பாற்ற முடியாது , இந்தியாவின் கடன் 215 லட்சம் கோடி , இங்கு TN ... லட்சம் கோடி , இதற்கு காரணம் இலவசங்கள் , கார்பொரேட் REBATES , சரி புதிதாக வருபவர் எல்லா இல்லவசமும் ரத்து என்று சொல்லுவாரா , முடியுமா , வ்ருவாய் பற்றா குறை நீக்க வரி வருவாய் தான் பெருக்கணும் அதற்க்கு மோடி TN அரசு போல புதுசு புதுசா வரி போடணும் , இதில் புதுசா வருகிறவர் என்ன சாதிக்க முடியும் ஆகவே தெரியாத கடவுளை விட தெரிந்து பேய் மேல் என்று போக வேண்டியது தான்

  • K
    Keith

    ஆட்சி​யாளர்கள் பின்​னால் மக்கள் செல்வதை மாற்றி மக்களின் பின்​னால் ஆட்சி​யாளர்களை வரவழைப்​பதும் மாற்று அரசி​யல்​தான். எப்போதெல்​லாம் அதிகாரக் குவியல் ஜனநாயகத்​தின் குரல் வளையை நசுக்க முற்​படு​கிறதோ அப்போதெல்​லாம் மக்களின் குரலை பாது​காத்து அதிகார வர்க்​கத்தை சரியான திசைக்கு திருப்பு​வதும் மாற்று அரசி​யல்​தான். என்ற கட்டுரையின் கருத்து நல்ல யோசனையாக இருந்தாலும் அதற்கு யார் செயல் வடிவம் கொடுப்பது என்ற கேள்வி எழுகிறது. அது ஏறக்குறைய 90% க்கும் அதிகமான உலக நாடுகளில் அது சாத்தியமில்லை. அதற்கு ஒழுக்க நடைமுறைகள், எல்லா அலுவலகங்களிலும் கண்டிப்பான நடைமுறைகள், நீதி, நேர்மை, நியாயங்களை, லஞ்சம் மற்றும் ஊழல் அற்ற நிலையே மற்றும் அதற்கு பாதிப்புகள் ஏற்படாவண்ணம் சூழ்நிலை வேண்டும். இதற்கு அஸ்திவாரம், இறையச்சத்தின் அடிப்படையிலேயே இது சாத்தியம். இதில் எந்தவிதமான இறையச்சம் என்ற கேள்வியும் எழுகிறது. மேலும், இறை கொள்கையில் மனிதன் தவறு செய்பவனே என்ற மதக்கோட்பாட்டையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பலதரப்பட்ட மக்களின் வாழ்வுரிமை, கொள்கைகள், நடைமுறைகள், செயல்பாடுகள், வணக்க வழிபாடுகள் முற்றிலும் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டவையாகவே இருக்கின்றன. ஆகையால், இது போன்ற நிலைமையை நாம் நினைத்து கூட பார்க்க முடியாது. இறைசட்டத்திலேயே உங்களுக்கு உங்கள் மார்க்கம் அவர்களுக்கு அவர்களின் மார்க்கம் என்று ஜனநாயக உரிமை, சுய சிந்தனை என்ற அடிப்படையில் முடிவு மேற்கொள்ளும் நிலையை வலியுறுத்தி இருக்கும் போது இது சாத்தியம் இல்லை. வேண்டும் என்றால் தேர்தல் முறையில் சீர்திருத்தம் செய்யலாம். கட்சிகள் மட்டுமே தேர்தலில் நிற்க வேண்டும். சதவீதத்தின் அடிப்படையில் உறுப்பினர்கள் தேர்வு, ஒருவர் இறப்புக்கு பிறகு /ராஜினாமாவுக்கு பிறகு சம்பந்தப்பட்ட கட்சியின் தலைமையே புதிய உறுப்பினர்களை தேர்வு செய்யலாம் என்ற நிலை இருந்தால் கட்சி மாறும் நிலை, தேர்தல் செலவுகள் குறைவது, கூட்டணி ஆட்சி என்று, மக்கள் அதிகாரம் பெற்றவர்களாக இருப்பார்கள் அல்லது கூட்டணி கட்சிகளாவது கேள்வி கேட்கும் நிலை வரலாம். உங்களுடைய கருத்துக்கு இதுவே மாற்று வழியாக இருக்கிறது. இதில் சிறிய கட்சிகளும் பெரிய ஆதாயம் மற்றும் அவர்களுக்கு மகிழ்ச்சிதான். அப்புறம், செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்ற பாரதியார் பாடல்கள் ஆனந்தமாய் ஒலிக்கும். ஜனநாயகம் தழைத்தோங்கும். கட்டுரையில் தெரிவித்த கருத்துகள், இந்த கருத்துக்களால் சாத்தியம் ஆகும் என்று மனத்தளவிலாவது மகிழ்ச்சி அடையலாம் அல்லவா.

 
x
News Hub
Icon