Published : 27 Dec 2024 06:19 AM
Last Updated : 27 Dec 2024 06:19 AM
வாசகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த சென்னைப் புத்தகக் காட்சி என்கிற அறிவுத் திருவிழா இன்று தொடங்குகிறது. தென்னிந்தியப் பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் சங்கம் (பபாசி) இந்தப் புத்தகக் காட்சியை ஆண்டுதோறும் நடத்திவருகிறது. இதுதான் இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய புத்தகக் காட்சியாகும். சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று தொடங்கும் புத்தகக் காட்சி ஜனவரி 12ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
பொங்கல் விடுமுறையை ஒட்டி நடைபெறும் விழா, இம்முறை சற்று முன்பாகவே தொடங்குகிறது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் புத்தகக் காட்சியைத் தொடங்கிவைக்க உள்ளார். பொங்கலை ஒட்டிய நீண்ட விடுமுறை நாள்கள் காரணமாக மக்கள் வெளியூர் சென்று விடுவதால் விற்பனை பாதிக்கப்படுவதாகப் பெரும்பாலான பதிப்பாளர்கள் கருதுகிறார்கள். அதை ஏற்று இந்தப் புத்தகக் காட்சி, பொங்கல் விடுமுறைக்கு முன்பே முடிவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், விற்பனை அதிகரிக்க வாய்ப்பிருக்கும் என பபாசி சார்பில் சொல்லப்படுகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment