Published : 02 Dec 2024 06:18 AM
Last Updated : 02 Dec 2024 06:18 AM
அசர்பைஜான் தலைநகர் பாகுவில் நவம்பர் 11 முதல் நவம்பர் 22ஆம் தேதி வரை, 29ஆவது காலநிலை உச்சி மாநாடு (Conference of Parties - COP 29) நடைபெற்று முடிந்திருக்கிறது. காலநிலை சார்ந்த நிதி ஒதுக்கீடு முடிவுகளை எடுப்பதே முக்கிய நோக்கம் என்று முன்பே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இது ‘நிதி உச்சிமாநாடு’ (Finance COP) என்றும் வல்லுநர்களால் அழைக்கப்பட்டது. மாநாட்டில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்றாலும் பெரும்பாலான செயல்பாடுகள் ஏமாற்றம் தருபவையாகவே இருக்கின்றன.
தலைவர்களின் பங்களிப்பு குறைவு: அமெரிக்கா, சீனா, இந்தியா, ஜெர்மனி, பிரேசில் போன்ற முக்கிய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கவில்லை. அந்தந்த நாடுகளின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டனர். “காலநிலைப் பிரச்சினை எவ்வளவு தீவிரமானது என்பதை இந்நாடுகள் புரிந்துகொள்ளவில்லை என்பதை இது வெளிப்படுத்துகிறது” எனக் காலநிலை அறிவியலாளர்கள் விமர்சித்திருக்கிறார்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment