Published : 19 Nov 2024 06:29 AM
Last Updated : 19 Nov 2024 06:29 AM

ப்ரீமியம்
‘புல்டோசர் நீதி’க்கு முற்றுப்புள்ளி!

வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளை, அரசு நிர்வாகம் புல்டோசர் மூலம் இடித்துத் தள்ளும் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம். சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களைச் சகித்துக்கொள்ள முடியாது என்பதற்கான அடையாளமாக புல்டோசர் நடவடிக்கைகள், ஆட்சியாளர்களால் - குறிப்பாக பாஜக ஆளும் மாநில அரசுகளால் - முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில், நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் அடங்கிய இரு நபர் அமர்வு இப்படியான நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை என அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

2017இல் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு புல்டோசர் கலாச்சாரத்தைத் தொடங்கியது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடியவர்களின் வீடுகள் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டன. மத்தியப் பிரதேசம், ஹரியாணா, டெல்லி என இந்தப் போக்கு விரிவடைந்தது. கல்வீச்சு சம்பவங்கள், ஊழல் முறைகேடுகள், பாலியல் குற்றங்கள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் தொடர்புடையவர்களாகக் குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடுகள் இடிக்கப்பட்டன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

  தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

  சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

  தடையற்ற வாசிப்பனுபவம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x