Published : 17 Nov 2024 07:28 AM
Last Updated : 17 Nov 2024 07:28 AM
கொரிய எழுத்தாளருக்கு இந்த ஆண்டு இலக்கிய நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ‘இந்திய இலக்கியம் 111 வருடங்களாகத் தொடர்ந்து காத்திருக்கிறது. இது மிக நீண்ட இடைவெளிதான்! 1913இல் ரவீந்திரநாத் தாகூரின் ‘கீதாஞ்சலி’க்கு இலக்கிய நோபல் பரிசு கிடைத்தது. இந்தப் பரிசைப் பெற்ற முதல் இந்தியரான தாகூர். ஆசியாவைச் சேர்ந்த முதல் நபர் என்ற சிறப்பையும் பெற்றார்.
1901இல் பிரஞ்சுக் கவிஞர் சாலி புருதோம் தொடங்கி இதுவரை 120 பேர் இலக்கிய நோபல் பரிசினை வென்றுள்ளனர். இதில் 103 பேர் ஆண்கள். 17 பேர் பெண்கள். ஸ்வீடிஷ் நாவலாசிரியர் செல்மா லாகர் லாஃப் 1909இல் முதன்முறையாக நோபல் பரிசு பெற்ற பெண் என்கிற சிறப்பினைப் பெற்றார். 1907ஆம் ஆண்டு விருது பெற்ற ருட்யார்ட் கிப்ளிங் இளம்வயதில் (41 வயது) இலக்கிய நோபல் பரிசு பெற்றவர். 2007இல் டோரிஸ் லெஸ்ஸிங்குக்கு நோபல் கிடைத்தபோது அவருக்கு 88 வயது! ஏழு ஆண்டுகள் (1914, 1918, 1935, 1940, 1941, 1942) இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஒருவருக்கும் வழங்கப்படவில்லை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment