Published : 08 Nov 2024 06:18 AM
Last Updated : 08 Nov 2024 06:18 AM
வட கிழக்குப் பருவமழை இந்த ஆண்டு தொடங்குவதற்கு முன்பே மழையால் தமிழ்நாட்டில் குளம், ஏரிகளின் கரைகளை உடைத்து, சாலைகளைச் சேதப்படுத்தி, வீட்டுக்குள் புகுந்து, மக்களுக்குப் பெரும் சிரமத்தை வெள்ளநீர் ஏற்படுத்திவிட்டது. ஏறக்குறைய 347 டிஎம்சி நீரை சேமிக்கக்கூடிய 41,127 குளம், ஏரிகளைக் கொண்டுள்ள தமிழகத்தில் வெள்ளச் சேதங்கள் ஏன் ஒவ்வோர் ஆண்டும் தொடர்கின்றன? நீர்நிலைகளில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க முடியுமா?
குளங்களின் பயன்கள்: பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் உருவாக்கப்பட்ட குளங்கள், நீர்த் தேவைகளைப் பூர்த்திசெய்ததோடு, மழை வெள்ளப் பாதிப்புகளையும் குறைத்துவந்தன. நீர்ப்பிடிப்புப் பகுதியில் மட்டுமல்லாமல், மழைநீரைக் குளங்களுக்குக் கொண்டு செல்லும் வாய்க்கால்களும், நீர் சேமிப்புப் பகுதிகளிலும் அரசு நிறுவனங்களாலும் தனிமனிதர்களாலும் மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்பாலும், நீர்நிலைகளை ஆழப்படுத்திச் செம்மை செய்யாத காரணங்களாலும், குளங்களின் நீர்க் கொள்ளளவு பெரிதும் குறைந்துவிட்டது. இதனால், சிறிய மழையளவைக்கூடத் தாக்குப்பிடிக்க முடியாமல் வெள்ளம் ஏற்பட்டு வீடுகளுக்குள் நீர் புகுந்துவிடுகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...