Last Updated : 08 Nov, 2024 06:13 AM

 

Published : 08 Nov 2024 06:13 AM
Last Updated : 08 Nov 2024 06:13 AM

ப்ரீமியம்
அடையாள அரசியல்: எம்.எஸ்.எஸ்.பாண்டியனின் எழுத்து தரும் விழிப்புணர்வு

பொருளாதாரம், சமூகவியல், அரசியல், பண்பாட்டியல் முதலான பல்துறைகளில் புலமை பெற்று, சர்வதேசக் கல்விப் புலத்தில் தமிழ்நாட்டு அரசியல் பண்பாடு குறித்துக் கவனம் ஈர்க்கக்கூடிய ஆய்வுகளையும் உரையாடல்களையும் ஆங்கிலத்தில் எழுதிவந்தவர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன். உலக அளவிலும் இந்திய அளவிலும் தமிழ்நாட்டு அரசியல் பண்பாடு குறித்து நடைபெற்ற ஆய்வுகளிலும் உரையாடல்களிலும் அயல் புலமையாளர்களின் குரல்களே ஆதிக்கம் செலுத்திவந்த நிலையில், தமிழ்நாட்டின் குரலாக எம்.எஸ்.எஸ்.பாண்டியன் ஒலித்தார். அவரின் இந்த இடத்தை இன்றுவரை யாரும் நிரப்ப முடியவில்லை.

திராவிட இயக்க ஆதரவு ஆய்வாளரா? - திராவிட இயக்க ஆதரவு ஆய்வாளர் என்கிற பிம்பம் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் மீது உண்டு. அவர் திராவிட இயக்கத்தைப் பரிவோடு, அதன் இருப்பின் நியாயப்பாட்டை எடுத்து விளக்கினார் என்பது உண்மைதான். ஆயினும் பல நேரம் திராவிட அடையாள அரசியல் ‘விடுதலை நோக்கு’ பண்பை இழந்து, வழக்கமான நிலைபெற்ற அதிகார அடையாள அரசியலாக உருமாறிவரும் போக்கு மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

  தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

  சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

  தடையற்ற வாசிப்பனுபவம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x