Published : 27 Oct 2024 06:39 AM
Last Updated : 27 Oct 2024 06:39 AM

ப்ரீமியம்
தொன்மம் தொட்ட கதைகள் - 19: சிவனைக் கேள்வி கேட்ட பெண்

எழுத்தாளர் ம.இராசேந்திரன் எழுதியுள்ள ‘மகாமகம்’ என்ற கதை தொன்ம மதிப்பீட்டை மறுவாசிப்புக்கு உள்ளாக்கும் சிறந்த கதை. இக்கதையில், அவர் உருவாக்கியிருக்கும் ‘இறைச்சிப் பொருள்’ தொண்ணூறுகளில் நிகழ்ந்த ஒரு பெருந்துயர வரலாற்றுடன் தன்னை இணைத்துக்கொள்கிறது. சோழ நாட்டில் உள்ள திருச்செங்கட்டாங்குடியில் பிறந்தவர் பரஞ்சோதியார். இவர் பல்லவ மன்னனான முதலாம் நரசிம்மவர்மனிடம் படைத் தளபதியாகப் பணியாற்றியவர். அவனது வாதாபிப் போரில் பெரும் பங்காற்றியவர்.

சிறந்த சிவத் தொண்டர். தம்மைச் சிறியவராகக் கருதிக்கொண்டு அடியவர்களுக்குத் தொண்டுசெய்வதால் ‘சிறுதொண்டர்’ என்று அனைவரும் இவரை அழைத்தனர். சிவபெருமான் சிவனடியார் வேடத்தில் சிறுதொண்டரின் பக்தியைச் சோதிக்க நினைக்கிறார். அடியவர் உருவத்தில் வந்த சிவபெருமான், ஐந்து வயதிற்கு உள்பட்ட பிள்ளையையே உணவாகக் கேட்கிறார். அத்தம்பதியினர் அதற்குச் சம்மதிக்கின்றனர் என்பது புராணக் கதை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x