Published : 23 Oct 2024 06:21 AM
Last Updated : 23 Oct 2024 06:21 AM

ப்ரீமியம்
வளர்ச்சி ஏற்றத்தாழ்வுகள் பற்றிய புரிதல் | நோபல் 2024

சமூக நிறுவனங்கள் எவ்வாறு பொருளாதார வளர்ச்​சி​யை​யும், நாடுகளின் செழுமை​யையும் தீர்மானிக்​கின்றன என்பது பற்றிய ஆய்வு​களுக்காக டாரன் அசெமோக்லு (Daron Acemoglu), சைமன் ஜான்சன் (Simon Johnson), ஜேம்ஸ் ஏ.ராபின்சன் (James A Robinson) ஆகியோ​ருக்கு இந்த ஆண்டுக்கான பொருளாதார நோபல் பரிசு வழங்கப்​பட்​டுள்ளது. அசெமோக்​லு​வும், சைமனும் அமெரிக்​காவில் உள்ள மாசசூசெட்ஸ் தொழில்​நுட்ப நிறுவனத்தில் (MIT) பேராசிரியர்​களாகப் பணிபுரி​கின்​றனர். ராபின்சன் அமெரிக்​காவில் உள்ள சிகாகோ பல்கலைக்​கழகத்தில் பொருளா​தாரப் பேராசிரியராக உள்ளார்.

டாரன் அசெமோக்லு, சைமன் ஜான்சன், ஜேம்ஸ் ஏ. ராபின்சன்

ஏற்றத்​தாழ்வின் அடிப்​படைக் காரணங்கள்: உலகின் முதல் 20 சதவீதப் பணக்கார நாடுகள், தற்போது ஏழை நாடுகளை​விடச் சுமார் 30 மடங்கு பணக்கார நாடுகளாக உள்ளன. பணக்கார நாடுகளுக்கும் ஏழ்மையான நாடுகளுக்கும் இடையே வருமான இடைவெளி நீடித்து​வரு​கிறது; ஏழ்மையான சில நாடுகள் பணக்கார நாடுகளாக மாறினாலும்கூட, முன்னேறிய நாடுகளின் நிலையை இன்னும் அவை எட்டவில்லை. பொருளாதார வளர்ச்​சியில் உள்ள வேறுபாடு​களை​யும், வளர்ச்சி ஏற்றத்​தாழ்வு​களையும் நிர்ண​யிப்பது என்ன என்பது பேரியல் பொருளா​தா​ரத்தின் (Macro Economics) மையக் கேள்வி​களில் ஒன்று.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x