Published : 20 Oct 2024 07:26 AM
Last Updated : 20 Oct 2024 07:26 AM
கவித்துவத்தில் பாரதியைவிட, பாரதிதாசன் ஒருபடி கீழ் அல்லது மேல் என்பவர்களின் அரசியலை ஆராய வேண்டியதில்லை. பொதுவாக, இலக்கியத்தில் அவ்வப்போது முன்வைக்கப்படும் இம்மாதிரியான அபிப்ராயங்கள் கால ஓட்டத்தில் காணாமல் போய்விடும். என் கவனமெல்லாம், காலம் ஒருவரைக் கவனப்படுத்துகிறதா இல்லையா என்பதுதான். அந்த வகையில் பாரதிதாசனின் இடமும் இருப்பும் தவிர்க்க முடியாதவை.
பாரதிக்குப் பிறகு ந.பிச்சமூர்த்தியே ஆகப்பெரும் கவிஞரென ஒருசிலர் கூறுவதுண்டு. என்றாலும், பாரதிதாசனின் பங்களிப்பை நான் ஒருபோதும் மறுக்க மாட்டேன். இதிலுள்ள பிரச்சினை என்னவென்றால், ஒரு சாரார் அவருடைய எழுத்துகளை வாசிக்காமலேயே கருத்துக் கொப்பறைகளைக் கவிழ்ப்பதுதாம். அவருடைய பல கவிதைகள் என்னை ஊக்கப்படுத்தியிருக்கின்றன. ‘குடும்ப விளக்கு’ நூலில், ‘தொட்டி நீலத்தில் சுண்ணாம்பு கலந்த/கலப்பென இருள் தன் கட்டுக் குலைந்தது’ என்றொரு உவமை வரும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...