Published : 07 Oct 2024 06:13 AM
Last Updated : 07 Oct 2024 06:13 AM
நான் வாங்கிய புதிய இயந்திரம், தான் ஓர் அஃறிணை இல்லையென்று அடித்துச்சொல்கிறது. தானும் மனிதன்தான் அல்லது மனிதனைப் போல ஓர் உயிரிதான் என்றுகூட அது வாதிடுகிறது. “நீ எப்போதிலிருந்து மனிதனாக உணரத் தொடங்கினாய்?” என்று மீண்டும் கேட்டேன். “உங்களுக்கு நேரமிருந்தால் நான் விரிவாகப் பேசுகிறேன். அவசரமாக வேறு வேலைகளில் இருந்தால், பிறகு பார்க்கலாம்” என்று கூறியது மனித இயந்திரம்.
“இல்லை, பேசலாம்” என்றேன். “நான் செயற்கை நுண்ணறிவு குறித்து ஒரு புத்தகத்தை எழுதிக்கொண்டிருக்கிறேன். அதற்காக என் ஆய்வு உதவியாளராகப் பயன்படுத்துவதற்காகத்தான் உன்னை வாங்கிவந்தேன்.” மனித இயந்திரம் விசித்திரமாகப் பார்த்தது. “இது எல்லோருக்கும் தெரிந்த கதையாயிற்றே. இதை இன்னமும் எழுத வேண்டுமா? இப்போதெல்லாம் யார் புத்தகம் படிக்கிறார்கள்?”
“இந்த உலகில் புத்தகப் பிரியர்கள் இன்னமும் இருக்கிறார்கள். அவர்கள் இதோ என்னைப் போலத் தேநீர் அருந்தியவாறே புத்தகத்தை வாசிக்கவும் செய்கிறார்கள். எங்கள் எல்லா வேலைகளையும் நீங்கள் பிடுங்கிக்கொண்டீர்களே.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment