Last Updated : 15 Sep, 2024 07:57 AM

 

Published : 15 Sep 2024 07:57 AM
Last Updated : 15 Sep 2024 07:57 AM

ப்ரீமியம்
கலைவெளிப் பயணம் -6 | விஜய் பிச்சுமணி: நினைவில் காடுள்ள கலைஞன்

இயற்​கையின் விழுமி​யங்​களில் ஒளிரும் கலைஞன் விஜய் பிச்சுமணி. இயற்கையோடு இசைந்​தி​யங்கும் வாழ்வின் மகத்து​வத்​தையும் மதிப்பு​களையும் கொண்டாடுபவை இவருடைய படைப்புகள். இவருடைய கலை மனமும் கலைத் திறன்​களும் அயரா உழைப்பும் ஒன்றோடொன்று முயங்கித் திளைத்து உருக்​கொண்​டிருக்கும் இவருடைய படைப்புலகம் பிரமிப்பும் திகைப்பும் அளிப்பது. கிராமம், காடு, மலை, அதன் மக்கள், மரங்கள், விலங்​குகள், பறவைகள் என இயற்கையோடு உணர்வு​பூர்வமாக உறவாடும் படைப்பு மனம் கொண்ட​வர்​.

நம் தொன்மையான வாழ்வின் மீதான ஏக்கங்​களும் ஆதங்கங்​களும் அதன் அழிவு குறித்த கவலைகளும் வேதனை​களும் உள்ளுறைந்​திருக்கும் படைப்புலகம் இவருடையது. இவை ஒருவகை​யில், விஜய் பிச்சுமணியின் கலைரீ​தியான பிரத்​தி​யேகக் கதையாடல்கள். இவருடைய படைப்பு​வெளி, தோற்றத்தில் பிரம்​மாண்​ட​மானது; வெளிப்​பாட்டில் கலை நுட்பங்கள் கூடியது. இவருடைய இந்தத் தனித்துவமான அம்சம்தான் பார்ப்பவர் எவரையும் ஒரே சமயத்தில் பிர​மிப்​புக்கும் திகைப்​புக்கும் ஆளாக்கு​கின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x