Published : 01 Sep 2024 07:42 AM
Last Updated : 01 Sep 2024 07:42 AM

ப்ரீமியம்
தொன்மம் தொட்ட கதைகள் - 15: கர்ணனின் காதலி

​வில்லி பாரதத்தில் இடம்பெற்றுள்ள பானும​திக்கும் கர்ணனுக்கும் இடையிலான தொன்மக் கதையை அடிப்​படை​யாகக் கொண்டு எழுத்​தாளர் கரிச்​சான்​குஞ்சு ‘பானுமதி’ என்றொரு சிறுகதையை எழுதி​யுள்​ளார். பதினேழாம் நாள் யுத்தத்தில் கர்ணன் கொல்லப்​படு​கிறார். துரியோதனனின் இறுதி நம்பிக்கையாக இருந்த கர்ணனின் மறைவிற்குப் பிறகு ஏறக்குறைய போர் முடிந்​து​விட்டது என்றே அனைவரும் கருதுகின்​றனர். திருத​ராஷ்டிரனும் காந்தா​ரியும் எப்படி​யாவது துரியோதனனை​யாவது காக்க வேண்டும் என்று முயல்​கின்​றனர். துரியோதனன் எவருடைய பேச்சையும் கேட்கத் தயாராக இல்லை. துரியோதனனை விட்டு​விடும்படி தன் பெரியப்பா கோரிக்கை வைத்தால் தன்னால் நிராகரிக்க முடியாது என்று தருமன் பதற்றமடைகிறார். அதற்குள் அவரைக் கொன்றுவிட வேண்டும் என்று பாண்ட​வர்கள் ஆர்வமாகக் காத்திருக்​கின்​றனர். துரியோதனனைக் கொன்றால்தான் போர் முடியும்; பீமன், திரௌப​தியின் சபதம் நிறைவேறும். இச்சூழ்​நிலை​யில், தன் மனைவி பானும​தியைத் தேடி துரியோதனன் வருகிறார். ஓர் இழைகூடப் பொன்னும் மணியும் அணியாமலும் கூந்தலை அலங்கரிக்​காமலும் இருக்​கிறார் பானும​தி.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x