Published : 11 Aug 2024 07:38 AM
Last Updated : 11 Aug 2024 07:38 AM

ப்ரீமியம்
அஞ்சலி: ஜேம்ஸ் சி.ஸ்காட் (1936-2024) | எதிர்ப்புவாதத்தை ஆராய்ந்த சமூக விஞ்ஞானி

பிரபல சமூக விஞ்ஞானியான ஜேம்ஸ் சி.ஸ்காட் 2024 ஜூலை 19 அன்று, தனது 87ஆவது வயதில் காலமாகி​விட்​டார். நியூஜெர்​சியில் பிறந்த இவர், ஒன்பது வயதில் தன்னுடைய தந்தையை இழந்து, பின் குவாக்​கர்ஸ் என்னும் நண்பர்கள் சமய சபை நடத்தும் பள்ளியில் பயின்​றார். யேல் பல்கலைக்​கழகத்தில் அரசியல் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். விஸ்கான்சின் பல்கலைக்​கழகத்தில் பேராசிரியராக இருந்து, பின் யேலுக்குத் திரும்பி 45 ஆண்டுகள் அரசியல், மானுட​வியல் துறையில் பேராசிரியராக இருந்​தார்.

பல்கலைக்கழக வளாகத்தில் போர் எதிர்ப்​பாளராக அறியப்பட்ட இவர், மலேசியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் சென்று இனவியல் சார் ஆராய்ச்​சிகளை மேற்கொண்​டார். குறிப்பாக, ஒரு மலேசியக் கிராமத்தில் இரண்டு ஆண்டுகள் தங்கி விவசா​யிகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்​டார். 1958-59 ஆண்டுகளில் ரோட்டரி நிதிநல்கை உதவியுடன் மயன்மார் சென்று, அங்கு ரங்கூன் தேசிய மாணவர் இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்​திக்​கொண்​டார். தன்னுடைய அரசியல் சித்தாந்​தத்தை ‘Two Cheers for Anarchism’ (அதிகார மையங்​களுக்கு எதிரான அரசியல் கோட்பாட்டை வாழ்த்​துதல்) என்ற நூலில் குறிப்​பிட்​டுள்​ளார். அதிகாரத்தில் இருப்​பவர்​களிடம் அடிபணி​யாமல் இருப்பதே பின்னாள்​களில் எதிர்ப்பு இயக்கங்​களில் ஈடுபட மக்களைத் தயார்​ படுத்தும் என நம்பினார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x