Published : 21 Jul 2024 06:28 AM
Last Updated : 21 Jul 2024 06:28 AM

ப்ரீமியம்
தொன்மம் தொட்ட கதைகள் - 11: ஒரு அரக்கியின் காதல்

எழுத்தாளர் தேன்மொழி எழுதியுள்ள ‘நாகாபரணம்’ என்கிற சிறுகதை, காப்பிய வரலாற்றில் மிக மோசமாகச் சித்திரிக்கப்பட்ட சூர்ப்பணகை என்கிற பெண்ணின் நிறைவேறாத காதலை மறுவாசிப்புச் செய்திருக்கிறது.

ராமனைக் கண்டதும் சூர்ப்பணகை காதல் கொள்கிறாள்; அவனை அடையத் துடிக்கிறாள். ராமனின் அழகு இவளைத் தொந்தரவுசெய்கிறது. அவனுக்காகத் தன் அரக்கர் வேடத்தை மாற்றிக்கொள்கிறாள். ராமன் மீதான காமம், நாகப்பாம்பின் விஷத்தைப் போல சூர்ப்பணகையின் தலைக்கு ஏறியதாகக் கம்பர் கூறுகிறார். சூர்ப்பணகையின் ஆசைக்கு சீதை தடையாக இருக்கிறாள். சீதையை ராமனிடமிருந்து அப்புறப்படுத்தினால் மட்டுமே தனது ஆசை நிறைவேறும் எனச் சூர்ப்பணகை நினைக்கிறாள். லக்குமணன் சீதைக்குக் காவல் இருப்பதை அறியாத சூர்ப்பணகை, சீதையைத் தூக்கிச் செல்ல முயல்கிறாள். லக்குமணன் சூர்ப்பணகையின் காது, மூக்கு, முலைக்கண் ஆகியவற்றை வாளால் சீவி எறிகிறான். சூர்ப்பணகை ரத்தப் பெருக்கால் துடிக்கிறாள்; எண்திசையும் கேட்கப் புலம்புகிறாள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x