Last Updated : 08 Jul, 2024 06:18 AM

 

Published : 08 Jul 2024 06:18 AM
Last Updated : 08 Jul 2024 06:18 AM

ப்ரீமியம்
பள்ளிக் கல்வியில் ஓர் அமைதிப் புரட்சி

உள்ளூர்ச் சமூகம், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என முத்தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்படுகின்ற பள்ளிகளின் வளர்ச்சி‌ தனித்துவம் மிக்கதாக விளங்கும். இதில் பள்ளி மேலாண்மைக் குழுக்களின் பங்களிப்பு முக்கியமானது. சிறப்பான வெற்றிகளுக்கு அடித்தளமிட்ட பள்ளி மேலாண்மைக் குழுக்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

புத்துயிர்ப்புடன்... 2009ஆம் ஆண்டு கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில், 2011இல் ‘தமிழ்நாடு குழந்தைகளின் இலவச - கட்டாயக் கல்வி உரிமை விதிகள்’ உருவாக்கப்பட்டன. அதன் வழியாகப் பள்ளி மேலாண்மைக் குழு செயல்பாட்டுக்கு வந்தது. கல்வி உரிமைச் சட்ட அமலாக்கத்தை உறுதிசெய்தல், பள்ளியின் நிதி - வள மேலாண்மை, கல்விக்கான தர உத்தரவாதம், உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உதவுதல், ஆசிரியர் மாணவர் வருகையை உறுதிசெய்தல், பள்ளிச் செயல்பாட்டில் சமூகப் பங்கேற்பு, விதிமுறை கண்காணிப்பு, பள்ளியின் அனைத்துப் பங்குதாரர்களுக்கும் பாலமாகச் செயல்படுதல் எனப் பல முக்கியக் கடமைகளை நிறைவேற்றப் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் உருவாக்கப்பட்டன. நோக்கங்கள் மிக உயர்வானதாக இருந்தாலும், பல பள்ளிகளில் அவை செயலற்றுக் கிடந்தன. தற்போதைய மாநில அரசு பொறுப்பேற்றது முதல், பள்ளி மேலாண்மைக் குழு, தனது முழுப் பரிமாணத்தோடு செயல்படத் தொடங்கியுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x