Published : 30 Jun 2024 06:19 AM
Last Updated : 30 Jun 2024 06:19 AM

ப்ரீமியம்
சர் ஜான் மார்ஷல்: திராவிடத் தொன்மையை உலகறியச் செய்தவர்

இந்தியத் தொல்லியல் அகழாய்வின் ஆதவனாக விளங்கியவர் சர் ஜான் மார்ஷல் ஆவார். இந்தியத் தொல்லியல் ஆய்வாளர்களின் துணைகொண்டு சிந்துவெளி நாகரிகத்தைக் கண்டறிந்து உலகுக்கு உணர்த்தியவர். சுமேரிய நாகரிகம் போன்று இந்தியாவில் கண்டறியப்பட்ட தொன்மையான நாகரிகம் இதுவென்று கூறி உலகை வியப்பில் ஆழ்த்தியவர். வேதகால நாகரிகத்திற்கு முன்பாக இந்தியாவில் தோன்றிய தொன்மையான நாகரிகம் சிந்துவெளி நாகரிகம் என்பதை எடுத்துக்காட்டிய பெருமை சர் ஜான் மார்ஷலைச் சாரும்.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இவர் 1876 மார்ச் 19இல் பிறந்தார். 1958 ஆகஸ்ட் 17இல் புகழுடன் மறைந்தார். ஆங்கிலேயர் காலத்தில் இந்தியத் தொல்லியல் துறையின் இயக்குநராக 1902இல் நியமிக்கப்பட்டு 1928 வரை நீண்டகாலம் பணியாற்றினார். இந்தியாவில் பல புகழ்பெற்ற தொன்மையான வரலாற்றுச் சின்னங்கள் இவர் காலத்தில் பாதுகாக்கப்பட்ட வரலாற்றுச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டு இன்றுவரை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பான சட்டமும் இவர் காலத்தில் இயற்றப்பட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x