Last Updated : 17 Jun, 2024 05:59 AM

 

Published : 17 Jun 2024 05:59 AM
Last Updated : 17 Jun 2024 05:59 AM

ப்ரீமியம்
அற்றைத் திங்கள் - 19: மரணம் ஒரு கலைதான்!

உலகத்தில் இறந்த முதல் மனிதர் ஆபேல். இவர் ஆதாமின் இரண்டாவது மகன். தர்க்கப்படி முதலில் பிறந்த ஆதாம்தானே முதலில் மரித்திருக்க வேண்டும்! ஆபேலின் மரணம் இயற்கையானதில்லை, அது கொலை. மனித இறப்புக்குப் பெரும்பான்மைக் காரணமாய் அமைவது முதுமை. ஆனால், மரணங்கள் பல வகைகளில் நிகழ்கின்றன. ‘மரணம் ஒரு கலை’யல்லவா!

நீர் மரணம்: கோட் பாக்கெட்டுகளில் அதிக எடையுள்ள கற்களை நிரப்பிக்கொண்டு, நதியில் மூழ்கி இறந்துபோனார் அறிவியல் தெரிந்த 59 வயது எழுத்தாளர் வர்ஜினியா வுல்ஃப். இறங்கிய நிலையத்தில் ஏறாமல் துங்கபத்திரை ஆற்றில் கரைந்து காணாமல் போனார் டெல்லியில்இருந்து தமிழகம் திரும்பிக்கொண்டுஇருந்த எழுத்தாளர் ஆதவன். 1960களில் புகழ்பெற்று விளங்கிய இந்திய ஆட்சிப் பணி அலுவலர் வி.கே.சி.நடராஜன், நீச்சல் குளத்து நீரில் மண்டை உடைந்து மரணித்தது அப்போது பேரதிர்ச்சி தந்த சம்பவம். இவர்களாவது மனிதர்கள்! கடவுளான ஸ்ரீராமனே ஓடும் சரயூ ஆற்றில் இறங்கித் தன்னையே மாய்த்துக்கொண்டான். நல்லதங்காள் தன்னோடு தன் குழந்தைகளையும் கிணற்று நீரில் இழந்தது, தமிழ்நாடு பல காலம் கண்ணீர் விட்டு அழுத சம்பவம். இவையெல்லாம் ‘அம்’பால் (தண்ணீரால்) நேர்ந்த மரணங்கள் என்றால், அம்பு வழியாகவே  கிருஷ்ணரின் மரணம் நிகழ்ந்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x