Published : 02 Jun 2024 06:28 AM
Last Updated : 02 Jun 2024 06:28 AM

ப்ரீமியம்
புனலும் மணலும் 50: மணல் திருட்டும் மனத் திரட்டும்

ஆ.மாதவனைப் பற்றிக் கூறும்பொழுது பலரும் அவரது ‘கிருஷ்ணப் பருந்து’ நாவலையும், ‘கடைத்தெருக் கதை’களையும் முன்னிறுத்துவார்கள். இரண்டும் அவரது சாதனைகள் என்பதில் ஐயமில்லை. ஆனால், ‘புனலும் மணலும்’ காலத்திற்குச் சற்றுமுன்னரே சிந்தித்த நாவல் என்றே சொல்ல வேண்டும். தமிழகத்தில் மணற்கொள்ளை ஒரு சுற்றுச்சூழல் அச்சுறுத்தல் என எல்லோரும் கருத ஆரம்பிக்கும் முன்னே, அதை மையமாக வைத்து மாதவன் எழுதிய நாவல் இது. அந்த விதத்தில் இந்த நாவல் சிறப்புக்குரிய ஒன்று.

வெறுப்பு இந்த நாவலின் முக்கியக் கருப்பொருள். தண்ணீர் குடித்தும் போகாத அடிநாக்கில் தங்கிய கசப்புபோல் அடிமனத்தின் வெறுப்பு. நாவலின் மையக் கதாபாத்திரமான அங்குச்சாமி, தங்கம்மையை விரும்பி மணக்கிறார். தங்கம்மையின் மகள், பங்கி. அதனால் அங்குச்சாமிக்கு மகள் முறையாகிறாள் பங்கி. ஆனாலும் அவலட்சணமாக இருப்பதாலோ என்னவோ பங்கியை அங்குச்சாமி வெறுக்கிறார். அவளைக் கரித்துக்கொட்டுகிறார். இந்த வெறுப்புதான் நாவலின் சரடு எனலாம். அது ஒரு சாவில் கொண்டுபோய் நாவலை முடித்துவைக்கிறது. இந்த வெறுப்பு ஒரு ஆண் மனத்தின் வெளிப்பாடு. எவ்வளவுதான் விருப்பப்பட்டு ஒரு பெண்ணை மணமுடித்தாலும் அவள் பெற்ற மகளைத் தன்னுடையதாக எண்ண ஒருபோதும் ஆண் மனம் சம்மதிப்பதில்லை. இதுவும் ஒரு காரணம்தான்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x