Published : 31 Mar 2024 08:03 AM
Last Updated : 31 Mar 2024 08:03 AM
சிறுபத்திரிகை எனும் நெடிய பாதையின் தன்னந்தனி யாத்ரிகனாக அறியப்பட்ட சி.மோகன், இதுவரை மூன்று நாவல்கள் எழுதியிருக்கிறார். சமீபத்தில் வெளியான ‘வீடு வெளி’ (2023) தவிர, ‘விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்’(2013), ‘கமலி’ (2020) ஆகிய நாவல்கள் வந்துள்ளன.
விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம் அவரது முதல் நாவல். வாழ்க்கையைத் தொலைத்துச் சாதித்த கலைஞன் ராமானுஜன் இதில் ராமனாக வெளிப்படுகிறான். சிறந்த ஓவியரான டக்ளஸ் ஒரு முக்கிய சாட்சி. கலை மேதைகளின் படைப்புலகத்தில் சதா சஞ்சரிக்கும் மோகன், அவருடைய நண்பர். நவீன இளம் ஓவிய மேதையான ராமன் இறந்த பின்னர், 10 ஆண்டுகளுக்குப் பிறகே மோகன் சென்னை வருகிறார்... அவரது ஓவியங்களைப் பற்றி அறிகிறார். அவர் வாழ்ந்த சோழ மண்டல ஓவியர் கிராமத்துக்குச் செல்கிறார்... அவரது சாதனைகளைக் கண்டு வியக்கிறார். இளம் வயதிலேயே வாழ்வை நீத்த ஓவியரை நினைத்து உள்ளம் பதைக்கிறார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT