Last Updated : 18 Feb, 2024 06:05 AM

 

Published : 18 Feb 2024 06:05 AM
Last Updated : 18 Feb 2024 06:05 AM

ப்ரீமியம்
கலைவெளிப் பயணம் - 3 | கே.ராமானுஜம்: விந்தைக் கலைஞனின் கனவுலக சாம்ராஜ்யம்

புது டெல்லியில் அமைந்திருக்கும் ‘கிரண் நாடார் மியூசியம் ஆஃப் ஆர்ட்’ 2010இல் மக்கள் பார்வைக்காகத் திறக்கப்பட்ட ஓர் அருங்காட்சியகம். 1940 முதல் இன்று வரையான இந்திய நவீன ஓவியங்கள், சிற்பங்களின் வளமான தொகுப்பாக இந்த அருங்காட்சியகம் திகழ்கிறது. பிரமிப்பூட்டும் ஓர் அற்புத உலகுக்குள் பிரவேசித்துத் திளைத்த பேரனுபவம் பார்வையாளர்களுக்குக் கிட்டும். 2022இன் தொடக்கத்தில், ‘கிரண் நாடார் மியூசியம் ஆஃப் ஆர்ட்’ அதன் பிரமாண்டமான கலை அருங்காட்சியகத்தின் ஓர் அங்கமாக, நம் காலத்தின் பெருமிதமான விந்தைக் கலைஞன் கே.ராமானுஜத்தின் கனவுலக சாம்ராஜ்யத்துக்கெனப் பிரத்யேகமான நிரந்தரக் காட்சிக்கூடம் ஒன்றை நிறுவியது. தனியார், சில கலைக் காட்சிக்கூடங்களின் சேகரிப்புகளிலிருந்து 42 படைப்புகளைப் பெரும் விலை கொடுத்து (சில கோடி ரூபாய்) வாங்கி இதை நிர்மாணித்துள்ளது. இது, இந்தியக் கலை வரலாற்றில் ஒரு மகத்தான நிகழ்வு. 2022ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் தேதி அங்கு சென்று அக்கூடத்தில் ராமானுஜத்தின் அரிய பொக்கிஷங்களைப் பார்வையிட எனக்கு வாய்த்தது என் வாழ்வின் மிகப் பெரிய பேறு. இப்பின்னணியில் ராமானுஜத்தின் கலை மேதமை பற்றிப் பார்க்கலாம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x