Published : 22 Oct 2023 07:41 AM
Last Updated : 22 Oct 2023 07:41 AM

ப்ரீமியம்
வண்ணங்களுக்கு வசப்படாததொரு வாழ்வு

ராஜராஜனின் கனவு

சின்னஞ்சிறு செடியோ, விழுதுவிட்டு நிலை கொள்ளும் பெருவிருட்சமோ, முளைத்து நின்று நிலைபெற, அதற்கான மண்ணும் சூழலும் நீரும் இன்ன பிறவும் இன்றியமையாததாகின்றன என்பது ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் வாழ்வுக்கும் பொருந்தும். அப்படியான குடும்பப் பின்னணி கொண்டவர் மருது. அவரது தந்தை மருதப்பன் ஒரு டிராட்ஸ்கியவாதி.

பதின்ம வயதுகளிலேயே ஓவியக் கலைக்குத் தன்னை ஒப்புக்கொடுத்துவிட்ட மருது, முறையாக ஓவியம் பயின்று சென்னை ஒவியக் கல்லூரியில் அனிமேஷன் துறையில் பயிற்சி எடுத்து, முதல் மாணவராகத் தேறியவர். படிக்கும் காலத்திலேயே அவரது கற்பனைத் திறன் காரணமாக எல்லாராலும் கவனிக்கப்படும் மாணவராக இருந்ததோடு மட்டுமல்லாமல், தன் ஆசிரியர்களான ஆர்.பி.பாஸ்கரன், தட்சிணாமூர்த்தி, ஆதிமூலம் போன்ற ஓவியக் கலைஞர்களைப் போல் சிறு பத்திரிகைகளுக்கு ஓவியப் பங்களிப்பை வழங்கத் தொடங்கிவிட்டார். அதற்கு அவருக்கு ஊக்கம் தந்த எழுத்தாளர்களில் முதன்மையானவர் சா.கந்தசாமி.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x