Published : 16 Feb 2023 06:28 AM
Last Updated : 16 Feb 2023 06:28 AM
பெண்களின் உழைப்புக்கு உரிய ஊதியமும் அங்கீகாரமும் வழங்கப்படுவதில்லை எனும் விமர்சனம் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் உண்டு. இந்தச் சூழலில், ‘‘குழந்தை வளர்ப்பும் குடும்ப நிர்வாகமும் பெண்களுக்கானவை என்கிற கற்பிதத்தை நாம் கைவிட வேண்டும்’’ என்று வலியுறுத்தியிருக்கிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
ஹரியாணா மாநிலம் குருகிராமில் ‘மதிப்புறு சமூகத்தின் அடித்தளம் பெண்கள்’ என்கிற தலைப்பில் நடைபெற்ற தேசிய மாநாட்டில் பேசிய அவர், “பெண்களுக்குச் சம வாய்ப்பு வழங்கப்பட்டால், அவர்கள் ஆண்களுக்கு நிகராகவோ அல்லது ஆண்களைவிட ஒருபடி மேலாகவோ சாதிப்பார்கள். எல்லாத் துறைகளிலும் பெண்கள் பங்களித்தாலும் தனியார் துறைகளில் இடைநிலை நிர்வாகப் பொறுப்பில் பெண்கள் மிக அரிதாகவே அமர்த்தப்படுகிறார்கள்” என்பதையும் சுட்டிக்காட்டினார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment