Published : 13 Feb 2023 06:45 AM
Last Updated : 13 Feb 2023 06:45 AM

ப்ரீமியம்
மேலவளவு தீர்ப்பு: ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்

மேலவளவு படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 13 பேர் முன்விடுதலை செய்யப்பட்டதை ரத்துசெய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது வருத்தமளிக்கிறது. 1996 இல் மதுரை மாவட்டத்தின் மேலவளவு, தனி ஊராட்சியாக அறிவிக்கப்பட்ட பிறகு, அங்கு தேர்தல் நடத்த முடியாமல் போனது.

பட்டியல் சாதியினர் தலைவர் பொறுப்புக்கு வருவதை விரும்பாத சாதி இந்துக்களே இதன் பின்னணியில் இருந்தனர். பலத்த எதிர்ப்புக்குப் பிறகு முருகேசன் அதன் தலைவரானார். அவருக்கும் அவர் சார்ந்த பிரதிநிதிகளுக்கும் பாதுகாப்பு வேண்டி முறையிடப்பட்டது. ஆனால், அது செவிமடுக்கப்படவே இல்லை. இந்நிலையில், 1997இல் முருகேசன் உள்ளிட்ட ஏழு பேர் சாதி இந்துக்களால் படுகொலை செய்யப்பட்டனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x