Published : 12 Feb 2023 08:11 AM
Last Updated : 12 Feb 2023 08:11 AM
நம் மொழியைப் போல் கவிதையை ஓர் உயர்திணையாகப் பாவிக்கிறோம். அவளைத் தேவி எனத் தரிசிக்கிறோம். ‘கவிதையைப் போன்றதுதான் காதலும். கவிதையும் காதலும் ஒன்றை ஒன்று சார்ந்தவைதான்; அதன் ஜீவன் இதுதான்’ என்றெல்லாம் கற்பிதம் கொள்கிறோம். கவிதையை ஒரு வாளைப் போல் ஏந்தி உலகின் பல பகுதிகளில் பெரும் புரட்சிப் போராட்டங்கள் நடந்துள்ளன. அறத்தையும் வீரத்தையும் நம் தெள்ளு தமிழ், பாடியுள்ளது. ஆனாலும் காதலையும் கவிதையையும் ஓருயிர், ஈருடலாகப் பார்க்கிறது ஒரு காலகட்டத்தின் பேதை மனம்.
மேற்கில் உருவான ‘மாடர்ன் பொயட்ரி’ (நவீன கவிதை) தமிழில் அறிமுகமாகி ஓர் அறிவுத் தளத்தில் வேதாந்தம் பேசித் திரிந்தது. அது மக்கள் மயப்பட்டது வானம்பாடி இயக்கக் கவிஞர்களால்தாம். அது இன்னும் நெருங்கி வந்தது, அவர்கள் எழுதிய காதல் கவிதைகளால்தாம் என உரக்கச் சொல்கிறது அந்தக் காலம். புரட்சி பாடிய அவர்கள், பூந்தென்றல் காதலையும் பாடினார்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment