Published : 21 Nov 2022 06:15 AM
Last Updated : 21 Nov 2022 06:15 AM
உணவு விடுதி ஒன்றில் எச்சில் இலையை அதற்குரிய தொட்டியில் போடப் போகிறான் ஒருவன். அதில் விழும் இலைகளுக்காகக் காத்திருந்த ஒருவனின் கை அதை எடுக்கப் பாய்ந்த வேகத்தில், இலையைப் போட வந்தவனின் கைமீது பட்டுவிட்டது. இதைத் தாங்கிக்கொள்ள முடியாத அவன், கடை முதலாளியின் பையனிடம் புகார் கூறிவிட்டுப் போய்விட்டான். த
ன் நிறுவனத்தின் மரியாதையைக் காப்பாற்றும் வேகத்தில் சென்ற அவன், எச்சில் தொட்டியில் இலைகளை ஆராய்ந்து கொண்டிருந்தவனின் காலை வாரிவிட, அவன் எச்சில் தொட்டிக்குள் விழுந்துவிட்டான்; கரண்டியால் சில அடிகளும் விழுந்தன. அடிபட்டவனுக்காக ஆதரவுக் குரல்கள் எழுந்தன. அவ்வாறு உரக்கக் குரல் எழுப்பும் ஒருவனைக் குறித்து, ‘அவன் கூப்பாடு போடுவதைக் கவனித்தால் காலம்காலமாக அடிவாங்கி, உதைபட்டு அனாதையாக அழுது ஓலமிட்டு ஓய்ந்த நூற்றுக்கணக்கான பொறுக்கிகளுக்கெல்லாம் சேர்த்துப் பதில் கேட்பது போலிருந்தது’ என்கிறார், இக்கதையின் ஆசிரியரான சுந்தர ராமசாமி.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT