Published : 31 Jan 2025 06:37 AM
Last Updated : 31 Jan 2025 06:37 AM
புத்தாண்டின் முதல் ஏவுதலை, 2025 ஜனவரி 29இல் நிகழ்த்தி ‘என்.வி.எஸ்-02’ (NVS-02) என்கிற செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தியுள்ளது இஸ்ரோ. இந்த ஏவுதலைத் தனது 100ஆவது முக்கிய ஏவூர்தி செலுத்துதல் எனவும் அடையாளப்படுத்தியுள்ளது. இந்தத் தருணத்தில், இஸ்ரோவின் வரலாற்றையும் வளர்ச்சியையும் சற்றே திரும்பிப் பார்க்கலாம்!
நேருவின் முயற்சி: 1969இல் தும்பா என்னும் மீனவக் கிராமத்துக்கு அருகே சைக்கிளில் சிறு ரக ஏவூர்தியை ஏந்திச் சென்று விண்ணில் செலுத்தி, அதன் தொடர்ச்சியாகப் பல்வேறு அனுபவங்களைப் பெற்றுப் படிப்படியாக இந்த நிலையை இஸ்ரோ எட்டியுள்ளது. ஏவூர்திகள், செயற்கைக்கோள்கள், விண்ணகப்பொருள்களுக்குச் செல்லும் விண்கலங்கள், ஏவுதளம் போன்ற கட்டமைப்புகள், விண்வெளித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் திறன் வளர்த்தல், எரிபொருள் போன்ற புதிய பொருள்களைத் தயாரிக்கும் தொழில்நுட்பம், மின்னணுக் கருவி முதல் செயற்கை நுண்ணறிவு எனப் பற்பல தளங்களில் இஸ்ரோ போன்ற விண்வெளி நிறுவனங்கள் ஈடுபடும். இவற்றில் ஏவூர்தி நுட்பம் குறித்துப் பார்ப்போம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment