Published : 21 Jan 2025 06:25 AM
Last Updated : 21 Jan 2025 06:25 AM
தமிழகத்தில் 2023-24இல் மகப்பேறு மரணங்கள், முந்தைய ஆண்டைவிட 17% குறைந்துள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல், பெரும் துயரத்தின் தீவிரம் தணிகிறது என்கிற நிம்மதியை அளிக்கிறது. மகப்பேறு என்பது ஒரு பெண்ணுக்கு இரண்டாவது பிறப்பு எனக் கருதப்படுகிறது. குழந்தை உயிருடன் பிறக்கும் ஒரு லட்சம் மகப்பேறுகளில் 398 தாய்கள் உயிரிழக்கும் அளவுக்கு 1997-1998இல் இந்திய அளவில் நிலை இருந்தது. இது 2020இல் 99 பேர் எனக் குறைந்தது. தமிழகத்தில், கடந்த 20 ஆண்டு காலத் தரவுகளின்படி, பிரசவிக்கும் ஒரு லட்சம் பெண்களில் 134 பேர் இறப்பதாகவே 2001இல் நிலைமை இருந்தது.
இது 2018-2020இல் 54 பேர் எனக் குறைந்தது. 2023-2024இல் இந்த எண்ணிக்கை 45.5 பேர் ஆகக் குறைந்தது. மேற்கண்ட நிலையிலிருந்து 10க்கும் குறைவானோர் என்கிற நிலையை அடுத்த 2 ஆண்டுகளில் எட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக அரசின் மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் சுப்ரியா சாஹு 2024 அக்டோபரில் அறி வித்தார். அதற்கான செயல்திட்டம் வகுக்கப்பட்டு, மாநில அளவில் அவர் தலைமையில் ஒரு செயலாக்கக் குழுவும் மாவட்ட அளவில் அந்தந்த ஆட்சியர் தலைமையிலான செயலாக்கக் குழுக்களும் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...